Type Here to Get Search Results !

"உலக சுற்றுலா தினவிழா" 2024-ஐ முன்னிட்டு சுற்றுலா மற்றும் அமைதி எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் "உலக சுற்றுலா தினவிழா" 2024- ஐ முன்னிட்டு, சுற்றுலா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மற்றும் அமைதி எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவியர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் அவர்கள் இன்று (27.09.2024) பரிசுகளை வழங்கினார்.


செப்டம்பர்-27ஆம் நாளினை உலக சுற்றுலா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து ஆண்டுதோறும் ஒரு கருத்தினை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் உலக சுற்றுலா தின விழா 2024 -வை முன்னிட்டு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டு சுற்றுலா மடிப்பேடுகள் வழங்கப்பட்டது.

மேலும், சுற்றுலா தினத்தினை முன்னிட்டு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ / மாணவிகளிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று பரிசுகளை வென்ற மாணவ / மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்  சு.சாந்த குமார் அவர்கள் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


இந்நிகழ்வுகளில், மாவட்ட சுற்றுலா அலுவலர் க.பழனிச்சாமி,  உதவி சுற்றுலா அலுவலர்       மு. மணி,     மாணவ,     மாணவியர்கள்     உட்பட      துறை  சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.                                                




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.