Type Here to Get Search Results !

தாய் அல்லது தந்தையரை இழந்த மாணவ - மாணவிகள் 17 பேருக்கு தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கிய மொடக்குறிச்சி எம் எல் ஏ ...


மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்துவரும் தாய் அல்லது தந்தையரை இழந்த மாணவ -  மாணவிகள் 17 பேருக்கு  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  அவர்கள் தீபாவளிக்கான புத்தாடைகளை 29.10.2024 நேற்று பள்ளிக்கு நேரில் சென்று வழங்கினார்.




பின்னர்  பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி, பொருளாளர் கணேஷ், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.