Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டத்தில் 19,64,676 வாக்காளர்கள் உள்ளனர் - வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர்...


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (29.10.2024), மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2025-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2006 அன்று வரை பிறந்தவர்கள்) விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் மற்றும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025-கான கால அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2024) வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் விவரம் பின்வருமாறு:



மேலும் ஈரோடு மாவட்டத்தில், 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 21465 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டும், 19,645 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 19,64,676 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 3.22 சதவீதம் அதிகமாக உள்ளனர். மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகர்களின் அலுவலகம் மற்றும் வாக்குசாவடி மையங்களின் அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குசாவடி அமைவிடங்களிலும் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப படிவங்களை இன்று (29.10.2024) முதல் 28.11.2024 வரை சமர்ப்பிக்கலாம். மேலும், சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள 2222 வாக்குசாவடிகளிலும் வருகின்ற 16.11.2024, 17.11.2024 மற்றும் 23.11.2024, 24.11.2024 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். 01.01.2025-ம் நாளன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்கத்திருத்த காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.


17 வயது முடிவடைந்த நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாக விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய காலாண்டுகளில் 18 வயது பூர்த்தியடையும் தகுதியுள்ள விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் அந்தந்த காலாண்டுகளில் முதல் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் இணைக்க பொதுமக்கள் இணைய வழி முகவரியான www.voters.eci.gov.in என்ற தளம் வாயிலாக மற்றும் Voters helpline App என்ற செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.




ஈரோடு மாவட்டத்தில் பழுதடைந்த மற்றும் செயல்படாத கட்டிடங்களில் அமையப்பெற்ற வாக்குசாவடிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக 99. ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் (பாகம் எண்-292), 103 பெருந்துறை சட்டமன்றதொகுதியில் (பாகம் எண்-145) என தலா ஒரு வாக்குசாவடி அமைவிடமும் மற்றும் 107 பவானிசாகர் சட்மன்ற தொகுதியில் 15 வாக்குசாவடி அமைவிடங்கள் (பாகம் எணகள்-95, 109, 110, 111, 117, 118, 236, 237, 238, 239, 242, 243, 244, 247 மற்றும் 248) என ஆக மொத்தம் 17 வாக்குசாவடியின் அமைவிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 959 வாக்குசாவடி அமைவிடங்களில் 2222 வாக்குசாவடி நிலையங்கள் அமைந்து உள்ளன. 

அதன் விவரம் பின்வருமாறு:


வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகம், கோரிக்கைகள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ, சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ அல்லது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-(0424) மூலம் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 63.8 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ம.சதீஸ்குமார் உட்பட அனைத்து அங்கிகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள், தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.