ஈரோடு மாவட்டம். பேருந்து நிலையம் அருகில் சுருதி (வயது 4 ½) மற்றும் தட்ஷிதா (வயது -3 ½) என்ற இரு குழந்தைகளையும். குழந்தைகளின் தாய் ஒரு பையுடன் விட்டுச்சென்ற நிலையில் குழந்தைகளை குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த குழந்தைகள் பற்றி யாரேனும் உரிமை உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் செய்தி வெளியான 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், புதிய கட்டிடம் 6 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு - 638011 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படி ஆட்சேபனை எதுவும் தெரியப்படுத்தப்படாத பட்சத்தில் CARA (Central Adoption Resource Authority) என்ற இணைய தளத்தின் மூலம் பதிவு செய்து குழந்தை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்து வழங்கபடும். அதன் பிறகு குழந்தையை பெற இயலாது, என ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.