மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்களின் அறிவுறுத்தலின்படி, பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு, தீ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள், ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (03.10.2024) ஈரோடு மாவட்டம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு காவேரி கரை கருங்கல்பாளையம், நம்பியூர் இளத்தூர் எல்பி.பி வாய்க்கால், பவானி காடையாம்பட்டி ஏரி, பெருந்துறை வாய்க்கால் மேடு எல்.பி.பி. வாய்க்கால், அந்தியூர் வட்டம் அத்தாணி பவானி ஆறு. ஆசனூர் ஓங்கல்வாடி குளம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் படித்துரை, சென்னிமலை வட்டம் இரைட்டாபாலைம் எல்.பி.பி. வாய்க்கால், மொடக்குறிச்சி வட்டம் மண்ணாதம்பாளையம் காவிரி ஆறு, சத்தியமங்கலம் செண்பகபுதூர் வாய்க்கால், கோபிசெட்டிபாளையம் வட்டம் மூலவாய்க்கால் சத்திரோடு. கோபி ஆகிய இடங்களில் 11 தீயணைப்பு நிலையங்கள் சார்பில், வடகிழக்கு பருவமழை காலங்களில் எதிர்நோக்கும் மழைக்கால பேரிடர்களை கையாளும் விதம். தற்காலிக மிதவை உருவாக்கி மழை வெள்ளத்தில் மிதக்கும் விதம், கட்டட இடிபாடுகளில் உயிரினங்களை மீட்கும் உபகரணங்கள், தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்படும் ஊர்திகள் மற்றும் அவசர கால ஊர்தி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை மற்றும் சத்தியமங்கலம் சென்பகபுதூர் வாய்க்கால் ஆகிய இடங்களில் சுழல் ரம்பம், ஸ்கூபா நீச்சல் உடை, உடைக்கும் ரம்பம், மூச்சு கருவி, அதிக அழுத்தம் கொண்ட காற்று பைகள், உயிர்காக்கும் மிதவை, உயிர் காக்கும் மிதவை ஜாக்கெட், படகு, வெட்டும் மற்றும் விரிக்க வைக்கும் கருவி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் காட்சிபடுத்தப்பட்டு அதன் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள், தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.