Type Here to Get Search Results !

வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் விருது மற்றும் பரிசு தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு ...


ஈரோடு மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தகுதிகளின் அடிப்படையில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூபாய்.1,00,000/- இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான விருது மற்றும் பரிசு தொகை வழங்கும் பொருட்டு பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய 13 வயதுக்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி-24 இல் மாநில அரசின் விருது வழங்கிட தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in 30.09.2024-க்குள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. 

தற்பொழுது, மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு 25.12.2024 முடிய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்விருது தொடர்பாக தேவைப்படும் விவரங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகம் 6 வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  அவர்கள் தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.