Type Here to Get Search Results !

ஈரோடு மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.


ஈரோடு வடக்கு அரிமா சங்கம், ஈரோடு வாசன் கண் மருத்துவமனை, ERODE BIOPATH LAB மற்றும் ஈரோடு மாநகராட்சி இணைந்து ஈரோடு மாநகராட்சி ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் ஈரோடு மாநகராட்சியின் 3வது மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.




இந்த மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, ரத்த அழுத்தம், ரத்த வகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனை போன்ற மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டது.




இவ்விழாவில், ஈரோடு மாநகராட்சியின் 3 வது மண்டல தலைவர், மாநகராட்சி அதிகாரிகள், 324 E அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் அரிமா T.இளங்கோவன், அரிமா மாவட்ட கூடுதல் செயலர்கள், ஈரோடு வடக்கு அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.