Type Here to Get Search Results !

அரிமா சங்க மாவட்ட ஆளுநரின் அலுவல்முறை வருகை மற்றும் பட்டயம் வழங்கும் விழா...


30.11.2024 சனிக்கிழமையன்று, ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் ஹாலில் ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநரின் அலுவல்முறை வருகை விழா மற்றும் ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்க உறுப்பினர்களுக்கு பட்டயம் வழங்கும் விழா  நடைபெற்றது. 








இந்நிகழ்வில், மாவட்ட ஆளுநர் அரிமா N.P.செந்தில்குமார் PMJF அவர்கள்,  மாவட்ட முதல் பெண்மணி அரிமா R.S. புஷ்பலதா, முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பூர்ணிமா டன்னா MJF  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 



மாவட்ட ஆளுநர் அரிமா N.P.செந்தில்குமார் PMJF அவர்களின் அலுவல்முறை வருகை விழாவை தொடர்ந்து  இயக்குநர் குழு கூட்டம்  நடைபெற்றது.   அதைத் தொடர்ந்து, ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்க  உறுப்பினர்களுக்கு பட்டயம் வழங்கும் விழா  நடைபெற்றது. 




இதில், ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்க  பட்டயத் தலைவர் அரிமா ஜஹேரா தைசூன்,  பட்டயச் செயலர் (நிர்வாகம்) அரிமா தைசூன் முனீர், பட்டயச் செயலர்(சேவை) அரிமா A.கமல் ராஜ், பட்டயப்பொருளர் அரிமா P.ஹரிஹரன், அரிமா P.பானுப்பிரியா, அரிமா Er.N.பாலாஜி, அரிமா T.மகேஸ்வரி, அரிமா J.ஷகிலா, அரிமா M.தேவகி, அரிமா A.ரேணுகா தேவி, அரிமா R.ரேவதி, அரிமா ரேவதி சரவணன், அரிமா R.பாரதி பிரியா, அரிமா N.பழனிசாமி, அரிமா E.தனஞ்ஜெயன், அரிமா C.தேன்மொழி, அரிமா P.சுசீலா, அரிமா V.S.ராஜராஜேஸ்வரி, அரிமா S.சுகன்யா, அரிமா P.காந்தி @ இந்து, அரிமா P.மாலதி ஹரிஹரன், அரிமா V.D.பிரபு ஆகியோர்  கலந்து கொண்டு பட்டயத்தை  பெற்றுக் கொண்டனர். 




அதைத் தொடர்ந்து, முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பூர்ணிமா டன்னா MJF அவர்கள் “நமது ஆரோக்கியம்" சேவை திட்டத்தை துவக்கி வைத்தார்.  அமைச்சரவை செயலர் அரிமா C. வெங்கடேசன், அமைச்சரவை பொருளார் அரிமா R.P. ராஜி MJF,  அமைச்சரவை நிர்வாக அதிகாரி அரிமா K. மகேஸ்வரன் MJF, அமைச்சரவை கணக்கு அதிகாரி அரிமா C. குணசேகரன் MJF,  மண்டலத் தலைவர் அரிமா சந்திரா ஈஸ்வரன் MJF,  வட்டாரத் தலைவர் அரிமா K.C.தங்கமுத்து MJF, ஆளுநர் வருகை மாவட்டத்தலைவர் அரிமா A.சிவப்பிரகாசம், மாவட்ட கண்ணொளி திட்டத் தலைவர் அரிமா Dr.C.மோதிலால் PMJF  மற்றும்  மாவட்ட "நமது ஆரோக்கியம்" திட்டத்தலைவர் அரிமா Er.K.குமார்  MJF ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். 



மேலும், மேடை அலங்கார பிரிவில் சிறப்பாக பணியாற்றிய அரிமா P.ஹரிஹரன் அவர்களுக்கும், செய்தி பிரிவில் சிறப்பாக பணியாற்றிய அரிமா E.தனஞ்ஜெயன் அவர்களுக்கும் சிறப்பு பரிசுகளை மாவட்ட ஆளுநர் அவர்கள் வழங்கினார்.





மேலும்,  ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்க தலைவர் அரிமா A. மோகன்,  செயலர் (நிர்வாகம்) அரிமா T.S.P. தாமோதரன்,  செயலர் (சேவை) அரிமா A. இப்ராஹிம் சுஜாத்,  பொருளர் அரிமா E.N.முகம்மது உவைஸ் மற்றும் எக்ஸலண்ட் அரிமா சங்கத்தின் பட்டயத்தலைவி கௌரி கணேசன் அவர்களும், மூத்த ஆலோசகர் கணேசன் அவர்களும், அமைச்சரவை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  



































































Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.