இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வட்டாரம் வாரியாக வேலை கோரி பதிவு செய்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரமாக்கும் பணி, மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் உள்ள சாய்வு தளமானது மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அகற்றுதல், மாநகராட்சி சொந்தமான தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பவானி நகராட்சிப் பகுதியில் 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் தெருமின்விளக்குகள் அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் இருவழி சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி, கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகள், மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி, சத்தியமங்கலம் நகராட்சியில் மின்வாரிய பணியாளர்களை நியமித்து மின்பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்படாமல் செயல்படுத்துதல், மொடக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட எழுமாத்தூர், குலவிளக்கு பழமங்கலம் மற்றும் ஈஞ்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம், பெருந்துறை சிறப்புநிலை பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் வீட்டு இணைப்புக்கள் வழங்குதல், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குப்பட்ட பகுதியில் பழுதடைந்த நிலையிலிருந்த மின் கம்பங்கள் மாற்றியமைத்தல், பர்கூர் மலைக்கிராமங்களில் புதிதாக சமுதாயக்கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ் என், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், மாவட்ட வன அலுவலர் கு.வெ.அப்பால நாயுடு (ஈரோடு வன கோட்டம்), செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) சேகர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.