Type Here to Get Search Results !

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்...


ஈரோடு மாவட்டம், தாளவாடி, தலமலை, தொட்டபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலின் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து மாதம் மாதம் அமாவாசையன்று ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் அன்னதானம் வழங்குகின்றனர். 



இதனைத் தொடர்ந்து, நான்காவது மாத அமாவாசையை முன்னிட்டு 1000 க்கும் மேற்பட்டோருக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது. 



அறக்கட்டளையின் செயலாளர் தனசேகரன் முன்னிலையில் இந்த அன்னதான நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சியில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேலும், இதுபோன்று மாதமாதம் அமாவாசை அன்று அன்னதானம் வழங்கப்படும் என அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.