ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இந்திய திருநாட்டின் 79 -வது சுதந்திர தின விழா (15.08.2025) கொண்டாடப்பட்டது. ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு S.சமீனா, B.A., L.L.B., அவர்கள் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் T.சரத் சந்தர் (வழக்குரைஞர்), ஈரோடு அட்வகேட் அசோசியேசன் தலைவர் T.கோபால்ராசு, (வழக்குரைஞர்), ஈரோடு பார் அசோசியேசன் செயலாளர் K.பிரகாஷ், (வழக்குரைஞர்), ஈரோடு அட்வகேட் அசோசியேசன் செயலாளர் M.அருள்முருகன் (வழக்குரைஞர்) ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஈரோடு முதன்மை சார்பு நீதிபதி K. P. இளவரசி, B.A., B.L., அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஈரோடு பார் அசோசியேசன் தலைவர், ஈரோடு அட்வகேட் அசோசியேசன் தலைவர், அரசு வழக்கறிஞர் M.அருட்செல்வன், அரசு வழக்கறிஞர் S.V.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஈரோடு வழக்கறிஞர்களின் எழுத்தாளர்களின் நலச்சங்கத் தலைவர் கா. பா. ஆறுமுகம் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார்.
V.A. லோகநாதன் (Deputy Chief Legal Aid Defence Counsel, Erode) அவர்களால் வழங்கப்பட்ட, கையால் இயக்கும் மூன்று சக்கர வண்டி பழனி என்ற 81 வயது முதியவருக்கு வழங்கப்பட்டது. L.திருஞானசம்மந்தம் (Chief Legal Aid Defence Counsel, Erode) அவர்களால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு S.சமீனா, B.A., L.L.B., அவர்கள் தலைமையுரையாற்றி, பரிசுகளை வழங்கினார்.
ஈரோடு இரண்டாம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி G.சரண்யா, B.A., B.L., நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிகளில், K. உதயகுமார் (Protocal Officer) அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.