இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது என (15.03.2026) அன்று அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் மஞ்சள் வணிக வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பின் படி சுமார் 76 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. எனவே, அனைத்து தரப்பு மக்களுக்கும் வாக்களிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று வாக்குப்பதிவை பதிவு செய்திடவும். மேலும் தேர்தல் நேரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கவும், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், காவல் துறை சார்ந்த அலுவலர்கள் என அனைத்து பொதுமக்களும் வாக்களிக்கவும் இத்தகைய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கும் இந்த தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. எனவே தங்களுடைய ஒத்துழைப்பை நல்கி தேர்தல் நாளன்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
.jpg)
.jpg)
%20(1).jpg)
.jpg)
.jpg)