Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டத்தில்‌ 25.03.2022 அன்று வேளாண்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ - மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ தகவல்‌.

ஈரோடு மாவட்டத்தில்‌ மார்ச்‌ - 2022 -ஆம்‌ மாதத்திற்கான வேளாண்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில்‌ 25.03.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம்‌ காலை 10.00 மணி முதல்‌ 11.30 வரை மனுக்கள்‌ பெறப்படும்‌. 11.30 மணி முதல்‌ 12-30 மணி வரை விவசாய சங்கப்‌ பிரதிநிதிகள்‌ விவசாயம்‌ தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள்‌ குறித்து கருத்துக்கள்‌ தெரிவிக்கலாம்‌. பிற்பகல்‌ 12.30 முதல்‌ 1.30 முடிய அலுவலர்களின்‌ விளக்கங்களும்‌ தெரிவிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில்‌ விவசாய பெருமக்கள்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.