Type Here to Get Search Results !

மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப்பெற்று, அவற்றின்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ டாக்டர்‌.ப.முருகேசன்‌ அவர்கள்‌ உத்தரவிட்டார்‌.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ இன்று (14.03.2022) மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ டாக்டர்‌.ப.முருகேசன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ முதியோர்‌ உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால்‌ கைவிடப்பட்டோர்‌ உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்‌ துறை நடவடிக்கை, கல்விக்கடன்‌, தொழில்‌ கடன்‌, குடிநீர்‌ வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள்‌ மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்து மொத்தம்‌ 216 மனுக்கள்‌ வரப்பெற்றன. பொதுமக்கள்‌ அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ அவர்கள்‌ பெற்று உரிய துறை அலுவலர்களிடம்‌ வழங்கி அவற்றின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்‌. மேலும்‌, முதலமைச்சர்‌ தனிப்பிரிவு மனுக்கள்‌, அமைச்சர்‌ பெருமக்களின்‌ முகாம்‌ மனுக்கள்‌, மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ பெறப்பட்ட மனுக்கள்‌ மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்டார்‌. இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ டாக்டர்‌.ப.முருகேசன்‌ அவர்கள்‌, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19,500 மதிப்பீட்டில்‌ மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்‌. இக்கூட்டத்தில்‌ தனித்துணை ஆட்சியர்‌ (சமூக பாதுகாப்பு திட்டம்‌) குமரன்‌, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ இலாஹிஜான்‌, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌ மீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ கோதைசெல்வி உட்பட அனைத்து துறை அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.