Type Here to Get Search Results !

சென்னிமலை பகுதிகளில்‌ ரூ.78.00 இலட்சம்‌ மதிப்பிட்டில்‌ பல்வேறு வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌.

ஈரோடு மாவட்டம்‌, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, குமாரவலசு, குட்டபாளையம்‌ ஊராட்சிகள்‌ மற்றும்‌ சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ நேற்று (07.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ ஆகிய ரூ.78.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பல்வேறு வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்‌, குமாரவலசு ஊராட்சி, வி.மேட்டுப்பாளையம்‌ பகுதியில்‌ வேளாண்‌ மற்றும்‌ உழவர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ கரும்பு நாற்று உற்பத்தி மையத்தினையும்‌, குமார வலசு ஊராட்சி வெள்ளோடு பகுதியில்‌ பாரத பிரதம மந்திரியின்‌ நுண்ணீர்‌ பாசன திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.1.81 லட்சம்‌ மொத்த மதிப்பீட்டில்‌ ரூ.1.44 லட்சம்‌ மானிய உதவியுடன்‌ சொட்டுநீர்‌ பாசனம்‌ அமைத்து கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்‌, குட்டப்பாளையம்‌ ஊராட்சி ஓலப்பாளையம்‌ பகுதியில்‌ மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ நாற்றுப்பண்ணையினையும்‌,
அதே பகுதியில்‌ மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்‌ கீழ்‌ தனிநபர்‌ உறிஞ்சுகுழி அமைக்கப்பட்டுள்ளதையும்‌, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.20.48 இலட்சம்‌ மதிப்பிட்டில்‌ கழிவுநீர்‌ வடிகால்‌ கட்டப்பட்டு வருவதையும்‌, சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பாண்டியன்‌ தெரு மற்றும்‌ சோழன்‌ தெரு ஆகிய பகுதிகளில்‌ கலைஞர்‌ நகர்புற மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.36.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சாலைகள்‌ மேம்படுத்தும்‌ பணியினையும்‌,
வார்டு எனர்‌.9 பகுதியில்‌ 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.20.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பூங்காவில்‌ பேவர்‌ பிளாக்‌ அமைக்கும்‌ பணியினையும்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. தொடர்ந்து, வெள்ளோடு, அரசினர்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ நல மாணவர்‌ விடுதியினையும்‌ ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ உணவுகள்‌ மற்றும்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.
அதனைத்‌ தொடர்ந்து, கொடுமுடி வட்டம்‌, தம்பிரான்வலசு பகுதியில்‌, சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறையின்‌ சார்பில்‌ தமிழக அரசின்‌ மானியமாக ரூ.6.90 கோடி மதிப்பீட்டிலும்‌, தனிநபர்‌ நிறுவன பங்களிப்பாக ரூ.2.95 கோடி மதிப்பீட்டிலும்‌ என மொத்தம்‌ ரூ.10.29 கோடி திட்ட மதிப்பீட்டில்‌ காயர்‌ குழும வளர்ச்சி திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படவுள்ள நொய்யல்‌ காயர்‌ குழுமத்தினையும்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.
முன்னதாக, தம்பிரான்வலசு பகுதியில்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ பெற்றுக்கொண்டார்‌. இந்த ஆய்வுகளின்போது, இணை இயக்குநர்‌ (வேளாண்மை) சின்னசாமி, சென்னிமலை, கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌, சென்னிமலை, கொடுமுடி பேரூராட்சி செயல்‌ அலுவலர்கள்‌, பெருந்துறை, கொடுமுடி வட்டாட்சியர்கள்‌ உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.