Type Here to Get Search Results !

கோபி, திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா - என்.ஆர். நாகராஜ் தலைமையில், என். நல்லசிவம் திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் என்.ஆர். நாகராஜ் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
கோபி பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை ஈரோடு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு கழக பொறுப்பாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், திமுக கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்து ரவிச்சந்திரன் கலந்துகொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.