Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுக்கரைப்புதூர் அரசு மதுக்கடை முன் மகனை அரிவாளால் வெட்டிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதிநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 58). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் லோகநாதன் (வயது 27). லேத் ஓர்க் ஷாப்பில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். லோகநாதனின் மனைவி நந்தினி. நந்தினி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், பழனிச்சாமி பெற்ற 1 லட்சம் ரூபாய்க்கு கடனுக்கு, வட்டி பணம் கட்டுவதில், தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று புதுக்கரைப்புதூர் மதுக்கடை அருகே பழனிச்சாமி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பகுதியில் லோகநாதன் உட்கார்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. இதை கண்டதும் லோகநாதனிடம் சென்று பழனிச்சாமி பணம் கேட்டுள்ளார். இதனால், 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் பழனிச்சாமி ஆத்திரம் அடைந்து அரிவாளால் லோகநாதனை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த லோகநாதனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பழனிச்சாமியை தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.