மே 1 தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு ஊராட்சிக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தின் சார்பாக கொடியேற்று விழா
May 03, 2022
0
தமிழக முதல்வரும் கழக தலைவருமான மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க
இன்று 01.05.2022 மே 1 தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு
ஈரோடு வடக்கு மாவட்ட பவானி வடக்கு ஒன்றிய தொட்டிபாளையம் ஊராட்சி ஊராட்சிக்கோட்டையில் அமைந்து இருக்கும்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கொடியேற்று விழாவில்
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.
உடன் பவானி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கா.சு. மகேந்திரன் அவர்கள் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.