பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா...
July 18, 2022
0
13.07.2022 புதன்கிழமை, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் திறப்பு விழா மாநில பொதுச் செயலாளர் திரு. ஏ. பி. முருகானந்தம் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களால் குத்து விளக்கு ஏற்றி துவக்கி துவக்கி வைக்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்வில் தெற்கு மாவட்ட பார்வையாளர் பாயிண்ட் மணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ். சௌந்தரம், தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி. செந்தில்குமார், பொதுச் செயலாளர்கள் வி.சி. வேதனந்தம், எஸ்.எம். செந்தில், சிவகாமி மகேஸ்வரன், ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுதர்சனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா நிகழ்வின் போது பல்வேறு கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்வில் அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.