Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட காவல்‌ அலுவலகத்தில்‌ குற்ற விவாதிப்பு கூட்டம்‌ மற்றும்‌ சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள்‌ மற்றும்‌ ஆளிநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்‌ வழங்கும்‌ நிகழ்வு...

ஈரோடு மாவட்டத்தில்‌ 30.06.2022 -ஆம்‌ தேதி ஈரோடு மாவட்ட காவல்‌ அலுவலகத்தில்‌ உள்ள கூட்டரங்கில்‌ குற்ற விவாதிப்பு கூட்டம்‌ மற்றும்‌ சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள்‌ மற்றும்‌ ஆளிநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்‌ வழங்கும்‌ நிகழ்வுகள்‌ ஈரோடு மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ Dr. S. சசிமோகன்‌, இ.கா.ப., தலைமையில்‌ நடைபெற்றது.
இக்கூட்டத்தில்‌ கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்கள்‌, CWC மற்றும்‌ CCW ஆகியோர்கள்‌ உடன்‌ இருந்தனர்‌. மேற்படி கூட்டத்தில்‌ ஈரோடு மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல்‌ உதவி மற்றும்‌ துணை கண்காணிப்பாளர்கள்‌, சிறப்பு பிரிவு காவல்‌ துணைக்‌ கண்காணிப்பாளர்கள்‌ மற்றும்‌ அனைத்து காவல்‌ நிலைய காவல்‌ ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ சிறப்பு பிரிவு காவல்‌ ஆய்வாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.
ஈரோடு மாவட்டத்தில்‌ நடைபெற்ற கொலை, கொள்ளை, பாலியல்‌ வன்முறை போன்ற பல்வேறு குற்றசம்பவங்கள்‌ குறித்தும்‌, நிலுவையில்‌ உள்ள வழக்குகள்‌ குறித்தும்‌, சாலை விதிகளை பின்பற்றுதல்‌, வாகன விபத்துக்கள்‌ மற்றும்‌ உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து விவாதிக்கப்பட்டது, சட்டவிரோத செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கவும்‌, தொடர்‌ குற்ற செயல்களில்‌ ஈடுபடுவோர்‌ மீது குண்டர்‌ சட்டத்தின்‌ கீழ்‌ கைது செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும்‌ பல்வேறு வழக்குகளில்‌ திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த 68 காவல்‌ அதிகாரிகள்‌ மற்றும்‌ ஆளிநர்களுக்கு நேரில்‌ சான்றிதழ்‌ வழங்கியும்‌, நிலுவையில்‌ உள்ள அனைத்து வழக்குகளையும்‌ கண்டுபிடிக்க காவல்‌ கண்காணிப்பாளர்‌ அவர்கள்‌ ஊக்கமளித்து பாராட்டினார்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.