ஈரோடு வடக்கு மாவட்டம் மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய திமுக சார்பாக வாணிபுத்தூர் பேரூராட்சியில் 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்கள்,
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.ஜி. வெங்கடாசலம் மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் திரு எம்.சிவபாலன் அவர்களின் முன்னிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் திரு. சேகர் (எ) பழனிச்சாமி மற்றும் பேரூராட்சித் தலைவர் திரு டி.எம். சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், இளைஞர் அணி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.