மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், சக்தி நகர கழக செயலாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஜானகி ராமசாமி அவர்கள் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தி நகர கழகத்தின் சார்பாக இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் சத்தி வடக்குப்பேட்டையில் 16.12.22 அன்று நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் திரு. குடியாத்தம் அன்பு மற்றும் திரு. சேலம் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.