2023-ல் நடைபெற்று முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் உள்ள குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நா. நிரஞ்சன் என்ற மாணவர் பாடவாரியாக தமிழ் - 99, ஆங்கிலம் - 97, கணிதம் - 100, இயற்பியல் - 100, வேதியியல் - 100 மற்றும் உயிரியல் 99 ஆகிய மதிப்பெண்களை பெற்று மொத்தம்
595/600 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
மேலும் வாசுமதி என்ற மாணவி 589/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும், ச.க.சுபகரிணி என்ற மாணவி 580/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடமும் பெற்றுள்ளார்கள். மேலும் தேர்வெழுதிய மாணவர்களில் 3பேர் கணக்குப்பதிவியலிலும், 2-பேர் வணிகவியலிலும் மற்றும் கணிதம், இயற்பியல், வேதியியல், கணிளிஅறிவியல், பொருளியல் மற்றும் கணிணிப்பயன்பாடுகள் போன்ற பாடங்களில் தலா ஒருவரும் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வருப்பில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தாளாளர் திரு. K.A.ஜனகரத்தினம் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார். துணை தாளாளர் சுகந்தி, பள்ளியின் செயலர் டாக்டர் அரவிந்தன், இணைச்செயலாளர் டாக்டர் மாலினி, பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரிய ஆசிரியையகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் பாராட்டினர். மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டில் சாதனை படைத்த பள்ளியாகவும், கல்வியில் மாவட்ட மாநில தேசிய அளவில் சாதனை படைத்த பள்ளியாகவும், கல்வி மற்றும் விளையாட்டை இரு கண்களாக கொண்டு குமுதா பள்ளி செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.