Type Here to Get Search Results !

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோட்டில் தே.மு.தி.க. வினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்...



ஈரோடு மாநகர மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா 25.08.2023 நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் விசேஷ பூஜை நடத்தப்பட்டு பொங்கல் வழங்கப்பட்டது. இதன்பிறகு ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி கேக் வெட்டுப்பட்டு தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. சம்பத் நகரில் 6 க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி கேக் வெட்டப்பட்டது.  ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரிசி, பருப்பு மற்றும் நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

மரப்பாலத்தில் உள்ள கோவிலில் விஷேச பூஜை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஈரோடு ஆர் .என் .புதூர் ராயர் பாளையத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவாக அசைவ சாப்பாடு வழங்கப்பட்டது .

இதையடுத்து மாலை ஈரோடு மூலப்பாளையத்தில் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.மற்றும் ஈரோடு ஒன்றியம் சூரம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஈரோடு மாநகர மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். மற்றும் அவை தலைவர் ரங்கராஜன், மாவட்ட பொருளாளர் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர்கள் சஞ்சய் குமார், பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்த், தமிழ்ச்செல்வன், மாவட்ட நிர்வாகி வேல்முருகன், பகுதி செயலாளர்கள் சூரியம்பாளையம் பச்சமுத்து, அக்ரகாரம் பெருமாள், வீரப்பன்சத்திரம் சிலம்பரசன், சம்பத் நகர் சரவணன், திண்டல் மணிகண்டன், சூரம்பட்டி சுரேஷ், நால்ரோடு சண்முகவேல், மரப்பாலம் சுப்பிரமணி, கருங்கல்பாளையம் ஆறுமுகம், காசிபாளையம் முருகேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.