கோபிச்செட்டிபாளையம் ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
11. 08. 2023 இன்று "போதை இல்லா தமிழகம்" என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் மற்றும் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா ஆகியோர் இந்த நிகழ்விற்கு தலைமை வகித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். செந்தில்ராணி, ஆங்கில துறைத்தலைவர் முனைவர். சிவ குரு விக்னேஷ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.