ஈரோட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு கிழக்கு வட்டாரப்போக்குவரத்து அலுவலர் .பி.வெங்கடரமணி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கு.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் மாநில மற்றும் இதர சாலை ஓட்டுநர்களுக்கு ஈரோடு மாவட்டம் சோலார் பேருந்து நிலைய பகுதியில் வாகன ஒட்டிகளுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இதில் பயணத்தின் போது சீருடை மற்றும் இருக்கைப்பட்டை அணிவது, கைப்பேசி பேசிக்கொண்டு வாகனம் இயக்ககூடாது, அதிக பயணிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் இயக்கக்கூடாது, போதிய ஓய்வு மற்றும் துாக்கமின்மையால் வாகனம் இயக்கக்கூடாது, சாலையை பாதுகாப்பன முறையில் விபத்தில்லாமல் வாகனம் இயக்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது.