Type Here to Get Search Results !

மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, விளக்கேத்தி மற்றும் எழுமாத்துார் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு...

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புதுறை ஆணையகம் அனைத்து உணவகங்களிலும் தேங்காய் சட்னி மற்றும் தயிர், மோர் வகைகள், ஷவர்மா ஆகிய உணவு பொருட்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்திருந்தது. அது சமயம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடைபெற்ற வருகிறது.

மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, விளக்கேத்தி மற்றும் எழுமாத்துார் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எட்டிக்கன்,  செல்வன் மற்றும் அருண்குமார் ஆகியோர் 15 க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது லேபிள் போடப்படாத 2 லிட்டர் தயிர் பாக்கெட்டுகள் மற்றும் 3 லிட்டர் மோர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக கடையின் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 55 ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். தங்கவிக்னேஷ் அவர்கள் மாவட்டம் முழுவதும் இந்த ஆய்வு தொடரும் என்றும் உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு Whatsapp No 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.