ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நாக பஞ்சமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த வருடம் கோவிலில் நாக பஞ்சமி விழா நடந்தது. இதையொட்டி பிற்பகல் 3.30 மணிக்கு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. நாகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய தலைவர் எம். ஜெயபிரகாஷ், செயலாளர் வி. லட்சுமணன், பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.
ஈரோடு சுயம்பு நாகர் கோவிலில் நாக பஞ்சமி விழா...
August 23, 2023
0
Tags