Type Here to Get Search Results !

குழந்தைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி - S P ஜவகர் தொடங்கி வைத்தார்...


யங் இந்தியன்ஸ் சார்பில் குழந்தைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி 18.08.2023 இன்று நடந்தது.

ஈரோடு செங்குந்தர் மகளிர் மேல்நிலை பள்ளியில்  தொடங்கிய இந்த பேரணி மீனாட்சி சுந்தரனார் வீதி, ஈரோடு அரசு  ஆஸ்பத்திரி ரவுண்டானா வழியாக சென்று, மீண்டும் பேரணி புறப்பட்ட செங்குந்தர் பள்ளியை அடைந்தது. 

இதில் செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த சுமார் 180 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை யங்  இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் கோமதி ஸ்ரீ கல்யாண், துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
 நிகழ்ச்சியில் கோட்டை பகுதி முன்னாள் கவுன்சிலர் விஜய பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.