கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தனியார் கல்லூரியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் 52 பேர் சிறப்பு பயிற்சிக்காக கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு வந்திருந்தனர். நகராட்சி ஆணையாளர் சசிகலா அவர்கள் உத்தரவின் படி, துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், நிரூபன் சக்ரவர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் மக்கும் குப்பைகளை பிரித்து வழங்குவதன் மூலம் அவற்றை எவ்வாறு உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் அவைகள் எவ்வாறு மறுசுழற்சிக்கும் மறு பயன்பாட்டிற்கும் அனுப்பப்படுகிறது என்பது பற்றி கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து வெங்கடேஸ்வரா கலைக்கல்லூரி மாணவர்களுக்கு நுண் உரக்கூட மையத்தில் எவ்வாறு குப்பைகள் அரைத்து உரமாக்கப்படுகிறது என்பதையும், வள மீட்பு மையத்தில் மக்காத கழிவுகள் எவ்வாறு மறுசுழற்சிக்கும் மறு பயன்பாட்டுக்கும் அனுப்பப்படுகிறது என்பதையும், உணவு கழிவுகள் மூலம் எவ்வாறு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்தும் செயல் விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.
திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலக அலுவலர் அரவிந்த் அவர்கள் தூய்மை பாரத திட்டத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியானது திடக்கழிவுகள் அனைத்தையும் அறிவியல் முறைப்படி கையாளப்படும் விதத்தைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.