தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு நடவடிக்கை சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி 10.09.2023 அன்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணிடிட்டோஜாக் மாநில பொதுக்குழு உறுப்பினர் கு.ரமாமணி தலைமையில் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி.எட். பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதைக் கண்டித்தும், கைவிட வலியுறுத்தியும்,
ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்தரத்தினை முற்றிலும் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதும் கைவிட வலியுறுத்தியும்,
தொடக்கக் கல்வித் துறையில் 1 முதல் 8 வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத வகையில் இ எம் ஐ எஸ் செயலியில் பல்வேறு பதிவேற்றங்களைச் செய்யும் பணியினை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட இயலாத காரணத்தால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கல்விப் பணியைத் தவிர பிற பணிகளில் குறிப்பாக இ எம் ஐ எஸ் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திட வலியுறுத்தியும்,
சி ஆர் சி பயிற்சிகள் மற்றும் பிற பயிற்சிகளுக்கான ஏதுவாளர்களாக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதால் கற்றல், கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பயிற்சி ஏதுவாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வலியுறுத்தியும், விடுமுறை நாட்களில் பயிற்சிகள் அளிப்பதைக் கைவிட வலியுறுத்தியும்,
பள்ளி மேலாண்மைக்குழு ஒவ்வொரு மாதமும் கூட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே மேற்படி கூட்டங்களைக் கூட்ட வலியுறுத்தியும்,பேச்சுவார்த்தை அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி எட் பயிற்சி மாணவர்களை பள்ளிக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கண்டித்தும், ஆசிரியர்கள் பணிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ள என்னும் எழுத்தும் திட்டத்தை முழுவதும் கைவிடக் கோரியும் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் டிட்டோஜாக் மாநில திட்ட குழு உறுப்பினருமான வி. எஸ். முத்து ராமசாமி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர்கள் சரவணன், இராமணி, கோபாலகிருஷ்ணன், பா. அருள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் வேலுச்சாமி, மதியழகன், யு. கே. சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் ஊமுடிவில் மாநிலத் துணைத் தலைவர் அருள் சுந்தர ரூபன் நன்றி கூறினார்.