Type Here to Get Search Results !

இந்துஸ்தான் கல்லூரி சார்பில் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன...

ஈரோடு,  ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் சார்பில்,  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னிமலை நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. கிராமப்புற வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்ற காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் கிராமப்புற நூலகத்திற்கு கல்லூரியின் சார்பில் சுமார் 250 புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினர். நூலகங்களை வளர்த்தும்,  நூல்கள் வாசித்தும் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.