Type Here to Get Search Results !

ஈரோட்டில், நாளை (29.09.2024) செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பிரம்மாண்ட ஐம்பெரும் விழா...

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நாளை 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு துடுப்பதியில்  உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. 

விழாவிற்கு சங்க மாநில புரவலரும்  மாவட்ட கௌரவ ஆலோசகருமான கே. கே. பாலுசாமி தலைமை தாங்குகிறார். சங்கத்தின் மாவட்ட தலைவர் என். நந்தகோபால் வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர் சோழா எம். ஆசைத் தம்பி முன்னிலை வகிக்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி நன்றியுரை மாற்றுகிறார்.

விழாவில் ஜெ.சுத்தானந்தன், ஆர்.ஏ.என்.முத்துசாமி, சுதந்திரப் போராட்டத்தில் கொடி காத்த தியாகி குமரன், முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. 

சங்கத்தின் மாநில தலைவர் கே. பி. கே.  செல்வராஜ் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி பேசுகிறார். மேலும் விழாவில் சமுதாய சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா, 17ஆம் நூற்றாண்டில் ஈரோட்டை ஆண்ட மன்னர் சந்திரமதி முதலியார் உருவப்படம் வெளியிட்டு விழா, சங்கத்தின் 41 ஆம் ஆண்டு விழா, போன்ற ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது.

முன்னதாக காலை 10 மணிக்கு சிலம்பு, துடும்பு ஆட்டங்கள், வள்ளி கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக விழாக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.