ஈரோட்டில் நாளை (29.09.2024) ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் என்ற அறிவிப்பை, ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
அதன் காரணமாக நாளை காலை 10 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை ஈரோடு குமலன்குட்டை பேருந்து நிறுத்தம், பாலக்காடு. பெருந்துறை சாலை, வி.ஐ.பி. காலனி, திருவிக வீதி, டீச்சர்ஸ் காலனி மற்றும் ராணாலட்சுமணன் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
எனவே, மின்தேவை ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.