Type Here to Get Search Results !

ஈரோட்டில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் இணப்புகளுக்கான காசோலைகளை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார்...

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுகளுக்கு 2,735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழாவினை மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரையில் துவங்கி வைத்தார். 
அதனைத் தொடர்ந்து  ஈரோட்டில்,  மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகளுக்கான  காசோலைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா, ராஜ்யசபா எம்.பி.  அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாஜலம், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.  நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி. நவமணி கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரகாஷ் ஆகியோர்

 மற்றும் பேரூராட்சி தலைவர்கள்,  நகராட்சி தலைவர்கள்,   மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும்

கழக மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.