மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் பொற்க் கரங்களால் பெரியார் விருது பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியை சேர்ந்த A. பாப்பம்மாள் ( 108 ) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு இயற்கை எய்தினார்.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டிக்கு நேரில் சென்று மலர் வளையும் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.