Type Here to Get Search Results !

அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பழனிபுரம் 13-வது வார்டில் கட்சிக் கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.



ஈரோடு மாவட்டம் பவானியில் அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 18.10.2024 வெள்ளிக்கிழமை அன்று பவானி நகர அதிமுக சார்பில் பழனிபுரம் 13-வது வார்டில் கட்சிக் கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு, பவானி நகர அதிமுக செயலாளர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஜுகுனு பாலு, நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.ஜி.நாத்(எ) மாதையன் முன்னிலை வகித்தனர். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் அமைச்சரும்,பவானி சட்டமன்ற உறுப்பினருமான  கே.சி.கருப்பணன் அவர்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.


முன்னதாக, அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பவானி நகராட்சி வார்டு உறுப்பினர்கள் காவேரி செந்தில், பவித்திரா கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் இளம் பாசறை செயலாளர் பிரகாஷ், பவானி நகர IT யின் தகவல் தொடர்பு செயலாளர் பிரபாகரன், நகர அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் குமார், கார்த்திகேயன், செயலாளர் விஜயன், சிவக்குமார் கோகிலா, முருகேசன், சண்முகம், பேச்சாளர் கோதண்டம், மெய்வேல், மோகன், சுப்பிரமணி, அதிமுக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.