Type Here to Get Search Results !

ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஒரு முடிவுற்ற திட்டப்பணியினை அமைச்சர் சு.முத்துசாமி திறந்தும் வைத்தார்.


தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  நசியனூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பெரியவிளாமலை ஊராட்சியில் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்தும் வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  நசியனூர் பேரூராட்சியில் பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு (RIDF) வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 1 ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிக்கும், சுஜில்கரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நபார்டு (RIDF) வங்கித் திட்டத்தின் கீழ் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிக்கும், வணிக வரித்துறையின் சார்பில் பவானியில் ரூ.2.35 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வரி அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கும், நசியனூர் பேரூராட்சியில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கும் என மொத்தம் ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.


தொடர்ந்து, பெரியவிளாமலையில் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஷ்,  இணை ஆணையர் (மாநிலவரி, ஈரோடு கோட்டம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், துணை ஆணையர் (மாநில வரி, ஈரோடு) ரேணு .எஸ்.கமல், ஈரோடு ஊராட்சி ஒன்றியத் தலைவர் பிரகாஷ், உதவி இயக்குநர்கள் பெ.கணேசன் (பேரூராட்சி), உமாசங்கர் (ஊராட்சிகள்), நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா லோகேஸ்வரன், துணைத் தலைவர் பத்மநாதன் செயல் அலுவலர் பா.கோவிந்தராஜா, பெரியவிளாமலை ஊராட்சி மன்றத்தலைவர் தா.பூவிழி, மகிலா காங்கிரஸின்
மாநகர மாவட்ட தலைவி மற்றும் நசியனூர்  11 வார்டு கவுன்சிலர் ஞான தீபம் உட்படதொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.