Type Here to Get Search Results !

சங்ககிரியில் தமிழ்நாடு அன்ஆர்கனைஸ்ட் ஒர்க்கர்ஸ் ஃபெடரேஷனின் சிறப்பு கூட்டம் ..


சங்ககிரியில் உள்ள தமிழ்நாடு அன்ஆர்கனைஸ்ட் ஒர்க்கர்ஸ் ஃபெடரேஷனின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் மு. சிவகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஞானசிவம் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் சுமார் 15 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும்  நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், ஜெயவேல், சக்தி, சுதா, மகேஸ்வரி, தனம், கௌசல்யா, ராமன், பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். இறுதியில் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் சூரிய பிரகாஷ் நன்றி கூறினார்.


சிறப்பு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

1.  தமிழ்நாட்டில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் அனைத்து நல வாரியங்களிலும் உறுப்பினராக உள்ளவர்களுக்கு வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போனஸ் வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.  

2. நவீன இந்தியாவில் பல தொழிற்சாலைகளை உருவாக்கி அதில் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிஅவர்களின் குடும்பங்களை தமது குடும்பம் போல் பாவித்த இந்திய தொழிலதிபர் மறைந்த ஜே ஆர் டி டாட்டா அவர்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு கூட்டத்தினர் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி.

3. சமீபத்தில் சாம்சங் தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்காக நீண்ட நாட்கள் போராடினார்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சாம்சங் நிர்வாகத்தை பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண செய்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது .மேலும் ஒற்றுமையாக போராடிய தொழிலாளர்களுக்கும் ஆதரவளித்த அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.