இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 224 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு நத்தம் நிறுத்தப்பட்டது நீக்கம் செய்த பட்டாவினையும், தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற தற்காலிக தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 9 நபர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் ரூ.9,000/- மதிப்பில் கல்வி, மகப்பேறு மற்றும் ஓய்வூதிய உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு ரூ.25,000/- மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இளங்கலை பொறியியல் பயிலும் கோசணம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கு ரூ.50,000/-க்கான கல்வி உதவித்தொகையினையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.