Type Here to Get Search Results !

பேராசிரியர் பெருந்தகை க. அன்பழகன் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா - அமைச்சர் சு. முத்துசாமி மலர் தூவி மரியாதை செய்தார்.


ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களின் முகாம் அலுவலகத்தில், இனமான பேராசிரியர் பெருந்தகை க. அன்பழகன் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில், அலங்கரிக்கப்பட்ட பேராசிரியரின் படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் சு . முத்துசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார். 



இந்நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை அவர்கள், ராஜ்யசபா எம் பி அந்தியூர் செல்வராஜ் அவர்கள், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் அவர்கள், ஈரோடு மாநகராட்சியின் துணை மேயர் V.செல்வராஜ் அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர், கழக சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.