Type Here to Get Search Results !

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வருகை - ரூ.1368.88 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி , நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்...


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (20.12.2024) ஈரோடு மாவட்டம், சோலார் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ரூ.1368.88 கோடி மதிப்பீட்டில்  முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இவ்விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ரூ.951.20 கோடி மதிப்பீட்டில் 559 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.133.66 கோடி 222 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.284.2 கோடி மதிப்பீட்டில் 50,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாண்புமிகு மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.