ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையம் முத்து மகாலில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார் .உடன் திராவிட கழக தலைவர் கி. வீரமணி ஐயா அவர்கள், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் N. நல்லசிவம் அவர்கள்,
திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் அவர்கள், அந்தியூர் எம் எல் ஏ ஜி வெங்கடாசலம் அவர்கள், நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் அவர்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.