Type Here to Get Search Results !

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பாக 50 கைவினைனர்களுக்கு தலா ரூ.10000/- மதிப்புள்ள மேம்படுத்தப்பட்ட நவீன உபகரணங்கள்...


திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டியில் கல் சிற்பம் வடிவமைக்கும்   50  கைவினைனர்களுக்கு 25.8.2025 -ஆம் தேதியில் இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் நிதி உதவி மூலம் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பாக  ஒவ்வொருவருக்கும் ரூ. 10000/- மதிப்புள்ள மேம்படுத்தப்பட்ட நவீன  உபகரணங்கள் இலவசமாக  வழங்கப்பட்டது.  







நிகழ்ச்சியில்,  திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் B.  கார்த்திகை வாசன் அவர்களும், சேலம் கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையரகத்தின் உதவி இயக்குனர் திருமதி டி. ஜி. நீதா அவர்களும் கலந்து கொண்டு கைவினைனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட நவீன உபகரணங்களை  வழங்கினர்.






இந்நிகழ்வு, ஈரோடு பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் N. சிவசங்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.










------------------------------------------------------








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.