Type Here to Get Search Results !

நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் எட்டாவது மாத அமாவாசையை முன்னிட்டு அன்னதானம்...


ஈரோடு மாவட்டம், தாளவாடி, தலமலை, தொட்டபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலின் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து மாதம் மாதம் அமாவாசையன்று ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் அன்னதானம் வழங்குகின்றனர். 


இதனைத் தொடர்ந்து, 22.08.2025 இன்று எட்டாவது மாத அமாவாசையை முன்னிட்டு 1000 க்கும் மேற்பட்டோருக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயருக்கு சாக்லேட் மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 


இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு ஈரோடு கிங் ஆயில் மில் உரிமையாளர் ஆறுமுகம், கொத்துக்காரர் சண்முகசுந்தரம் மற்றும் சுப்பிரமணியம்  ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து கொங்கலம்மன் கோவில் அருகிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் இந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேலும், இதுபோன்று மாதமாதம் அமாவாசையன்று அன்னதானம் வழங்கப்படும் என அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.