மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து, இச்சிறப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
அதன்படி, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் (23.10.2025) இன்று நசியனூர் அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இம்முகாமில் மனு அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கு நல வாரிய அட்டையும், மின்சார துறையில் சார்பில் 3 நபர்களுக்கு மின் இனைப்பு பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்களையும் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து வள்ளிபுரத்தாம்பாளையம் செங்குந்தர் சமுதாய நல கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, 1 நபருக்கு பிற்படுத்தப்பட்டோர்க்கான சாதிச்சான்றிதழ், 1 நபருக்கு வருமான சான்றிதழ், 2 நபர்களுக்கு சாதி சாதிச்சான்றிதழ்களையும், 1 நபருக்கு சொத்து வரி பெயர் மாற்றம், 3 நபர்களுக்கு வீட்டுவரி ரசீது என மொத்தம் 8 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
இம்முகாம்களில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன், நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா லோகேஸ்வரன், துணைத் தலைவர் P. பத்மநாபன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
