Type Here to Get Search Results !

21.11.2025 அன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தகவல்.


ஈரோடு மாவட்டத்தில்  நவம்பர் - 2025-ஆம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தள கூட்ட அரங்கில்  21.11.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.  அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான  தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தொிவிக்கலாம். பிற்பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும்  தொிவிக்கப்படவுள்ளது.  இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் .




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.