ஈரோடு மாநகராட்சி மண்டலம் -2, செங்குந்தர் திருமண மண்டபம் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் இன்று (04.11.2025) நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்து, இச்சிறப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் இன்று செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இம்முகாமில் மனு அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக, 2 நபருக்கு சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், நாளைய தினம் (05.11.2025) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமானது, புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்திலும், வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சியில் நடுப்பாளையம் சமுதாயக்கூடத்திலும், நம்பியூர் வட்டத்தில் செல்லிபாளையம் பி.கே.மெட்ரிகுலேசன் பள்ளியில் என 3 இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.
இம்முகாமில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20-%20Copy%20(2).jpeg)
%20-%20Copy%20(1).jpeg)
.jpeg)