கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC-Group-II, Group -IV, TNUSRB, TET ஆகிய பயிற்சி வகுப்புகளில் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்த 12 மாணவர்கள் 2024-இல் நடைபெற்ற TNPSC GROUP -IV தேர்வில் தேர்ச்சி பெற்று கிராமநிர்வாக அலுவலர், ஊரகவளர்ச்சித்துறை, வணிகவரித்துறை, குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, கைத்தறித்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர். கடந்த TNPSC-Group-II/IIA முதனிலைத்தேர்வில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதன்மைத்தேர்வில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றுள்ளனர்.
இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம்.
%20(1).jpg)