அந்த வகையில் ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு "விளக்குகள் கண்காட்சி " மற்றும் விற்பனை 14.11.2025 முதல் 06.12.2025 வரை நடைபெறவுள்ளது.
மேலும், டெஸ்வேலி குளோபல் மார்க்கட்டில் அமைந்துள்ள நமது பூம்புகார் விற்பனை நிலைய கிளை கடை எண் 1114 லும் கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு "விளக்குகள் கண்காட்சி" மற்றும் விற்பனை 14.11.2025 முதல் 06.12.2025 வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் வீடுகள், கோவில்கள், அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் பூம்புகார் உற்பத்தி நிலையங்களான நாச்சியார்கோவில், மதுரை, வாகைகுளம். ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட உயர் தரமான பித்தளை விளக்குகள் 4 அங்குலம் முதல் 6 அடி வரையிலான அன்னம் குத்து விளக்குகள், கிளை விளக்குகள், கிளி விளக்குகள், மங்கள தீபம், மலபார் விளக்குகள், தூண்டா மணி விளக்குகள், பாலாடை விளக்குகள், பித்தளை தொங்கு விளக்குகள், சங்கு, சக்கர தொங்கு விளக்குகள், அன்னம் தொங்கு விளக்குகள், விநாயகர், லக்ஷ்மி பாலாஜி, காமாட்சி அஷ்டலக்ஷ்மி, பிரதோஷ விளக்குகள், குபேர விளக்குகள், நந்தா தீபம், யானை விளக்குகள். முருகன் விளக்கு, ஐந்துசர விளக்குகள் இரண்டு தகழி விளக்கு, சூடத்தட்டு கற்பூர ஆர்த்தி, டேபிள் விளக்கு, வண்ணமிகு வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய அகல் விளக்குகள், சூடுகளிமண்ணால் செய்யப்பட்ட உருளி, விளக்கு, பாவை விளக்கு இன்னும் பல விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் நாச்சியார்கோவில் குத்து விளக்குகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் புது வரவாக பஞ்சமுக தாமரை விளக்கு, ரோஜா பூ விளக்கு, கல் விளக்கு, அறுபடை விளக்கு, வாத்து வடிவ நந்தா விளக்கு, ஒரு முக விளக்கு. மூடியுடன் ஆத்ம விளக்கு, வாராகி விளக்கு, ஓம் மற்றும் வேல் உள்ள விளக்கு, மற்றும் பரிசு அளிக்கக்கூடிய விளக்குகள் விற்பனை மற்றும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் ரூபாய் 10/- முதல் 1,16,000/- வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட விளக்குகளுக்கு 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது, என மேலாளர் சேவியர் தெரிவித்துள்ளார்.
.jpg)